தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை மையம்..

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தென்தமிழகம், உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும்கூறப்பட்டுள்ளது.