தொடரும் ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேச விரோதம்’: சுப்பிரமணியசாமி கண்டனம்..!

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை தினமும் தொடர்ந்து உயர்த்தப்படுவது தேச விரோதம் என என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நாட்டை திவாலாகும் வகையில் நிதித்துறை செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். எரிபொருட்களின் விலை தினசரி உயர்த்தப்படுவதால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.