மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

8ஆம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவிகள் 108 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

பி.எஸ்.எல்.வி. சி 45 என்ற ராக்கெட் அடுத்த மாதம் 21ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என சிவன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சந்திரயான் 2 செயற்கைகோள் ஏப்ரல் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படும் என்றார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், L&T மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டு ஸ்தாபனத்திடம் இருந்தும் வாங்கப்படும் எனவும், இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.