தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும்.

புதுக்கோட்டை, சிவகங்கையில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முண்டியம்பாக்கத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பெய்துள்ளது.. திண்டுக்கல் நிலக் கோட்டையில் 11 செ.மீ மழை பெய்துள்ளது..