‘தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்’ : வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனும், சில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.