தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் …

அசானி புயல் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பரவலானமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் மற்றும் வட தமிழ்நாடு,திருப்பூர்,உதகை,தேனி, தென்காசி, மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது