தமிழகம்,புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் .

அப்போது பேசிய அவர், நவம்பர் 6-ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும்

இதனால் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 8-ம் தேதி இலங்கை, குமரி கடல் பகுதி வழியே கரையை கடக்க இருப்பதாகவும்,

இதனால், 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி சீற்றத்துடனும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சீற்றம் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் இருக்கும் மீன்வர்கள் 6-ம் தேதிக்குள் கரை திரும்புமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், கனமழை இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.