தமிழகத்தில் இன்று புதியதாக 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் பலியான நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,453-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,36,209- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,281- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.