ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத் தேதிகள் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.  இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 15ஆம் தேதி முதல், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் மூலம், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சமர்பிப்பதற்கு, வருகிற ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கடைசி நாளாகும். Teachers Training எனப்படும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்களும், B.Ed எனப்படும் இளங்கலை கல்வி பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.

முதல் தாள், இரண்டாம் தாள் என்ற அடிப்படையில், இருமுறையில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தபடும் என்றும், இவற்றிற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களும், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால், மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என்றும், ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.