திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு..

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து தற்போது திருபுவனம் பட்டு சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்தப் பட்டுச் சேலைகள், 3 -ம் குலோத்துங்கச் சோழன் திருபுவனச் சக்ரவர்த்தியின் சொந்த பயன்பாட்டுக்காக முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.

இதற்கு, புவிசார் குறியீடு கிடைத்திருப்பதின் மூலம் உலகளாவிய அளவில் இதன் மதிப்பு உயரும்.