திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும்.

இத்தலத்தில் அமைந்துள்ள சனீஸ்வரனை இறைவன் வணங்கி பேறு பெற்றார் என தல வரலாறு கூறுகிறது. அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார்.

இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் மற்றும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்று இன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இன்று காலை 11.02.2019 திங்கள் காலை 9.10 முதல் 10.20 மணிக்குள் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் அமைந்துள்ள

தர்ப்பாரண்யேசுவரர், அம்பாள், விநாயகர்,முருகன்,தியாகராஜர்,பரிகார மூர்த்தியான சனீஸ்வரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும்,

7 நிலை, 5 நிலை ராஜ கோபரம் மற்றும் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுரங்களில் யாக கலச நீரை ஊற்றினர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து தெய்வ சன்னதிகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தை்காண பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.