திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :நவ.17-ஆம் தேதி தொடக்கம்..

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இவ்வாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலையும் மாலையும் பஞ்சமூர்த்திகளுடன் உற்சவத் திருவீதி உலா நடைபெறும்.


20.11.2023 வெள்ளி கற்பக விருட்சம்,வெள்ளி காமதேனு வாகனத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருவீதிகளில் பவனி வருகின்றனர். 21.11.2023 அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா நடைபெறுகிறது.
23.11.2023 அன்று பஞ்மூர்த்திகள் மகாரதத்தில் தேர்திருவிழா நடைபெறும்.
26.11.2023 அன்று விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் மலையின் உச்சியில் ஏற்றப்படும். முன்னதாக காலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.