திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழப்பு..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிழந்தார்.

மலையில் சிக்கிய 10 பேரில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மலை ஏறிய தனியார் வங்கி தலைமை காசாளர் ஆனந்த்ராஜ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்..

மலை மீது ஏறத் தடை இருந்தும் பௌர்ணமி நாள்களில் வனத்துறைக்கு தெரியாமல் நள்ளிரவு மலை மீது பலர் ஏறிவருகின்றனர்.

இரவு நேரங்களில் மலையின் மீது செல்போன் வெளிச்சம் தெரிவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்