வெளியில் சிரிப்பு… உள்ளே மிருகம்…: டிடிவி தினகரன் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

 

வெளியில் சிரித்த முகத்துடன் காணப்படும் டிடிவி தினகரன், உள்ளே மிருகத்தனமான குணங்களை உடையவர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

 

குழாயடி சண்டையை உருவாக்கி பதவிக்கு வரவேண்டும் என்று தினகரன் நினைக்கிறார்.  வெளியில் சிரித்த முகத்துடன் காணப்பட்டாலும் உள்ளே மிருக குணத்தைக் கொண்டவர் தினகரன்.,

 

தகுதிநீக்கம் செய்யக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எம்.ஏக்கள் மேல்முறையீடு செய்திருந்தால், அதற்கான தீர்ப்பு வரும் வரை அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால், டிடிவி. தினகரன் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள 18 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் காவு கொடுத்துவிட்டார்.. தனிப்பட்ட முறையில் 18பேரும் பாவம்.

 

இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று கூறிய முடிவில் 2 நாட்களுக்குள் மாற்றம் ஏற்படக் காரணம் என்ன?

 

தகுதிநீீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் சாபமும், பாவமும் டிடிவி தினகரனை சும்மா விடாது.

 

தேர்தலில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் தேர்தல் பணியாற்றி வெற்றி பெறுவோம். டிடிவி தினகரன் வந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் அதிமுக இல்லை.

 

TTV Dinakaran is a smiling Animal: Says R.B.Udhayakumar says