வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீகளத்தீருடைய அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீ அன்னபூரணி அம்மன் கோயில் செல்லும் வழியில் செட்டியூரணி மேற்கு கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ களத்தீருடைய அய்யனார் மற்றும் கருப்பணசாமிக்கு குடமுழுக்கு விழா இன்று காலை ஆவணி 23-ஆம் தேதி (08.09.2022) சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவைகண்டு தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை வெற்றியூர் கல்லல் வகையறா பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.