தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது..


தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 37,92,126 ஆக உள்ளது.

இதில் ஆண் வாக்காளர் 18,71,638 பேரும், பெண் வாக்காளர் 19,19,582 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 906 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

இன்று தொடங்கி அக்டோபர் 31-ம் தேதி வரை 2 மாதங்களுக்கு பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணிகள் நடக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார்.

வாக்காளர் பட்டியலில் தகுதி யான நபர்களை சேர்ப்பதற்கான திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது.

இதையொட்டி, தற்போது உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் பற்றிய விவரங்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வாக்குச்சாவடிகள், கிராமசபை, குடியிருப்போர் நலச்சங்கங்களில் இது பார்வைக்கு வைக்கப்படும்.

மக்கள் அதைப் பார்வையிட்டு, தங்கள் பெயர், விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, குறைகள் இருப்பின் திருத்தப் பணிக் காலத்துக்குள் மாற்றிக்கொள்ளலாம்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியதாவது:

கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 86 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந் தனர்.
அதுமுதல் தற்போது வரை 1 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, தொகுதி மாற்றம் என 5 லட்சத்து 78 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில் தற்போது உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 791 பேர் உள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணி கள் அப்போதே தொடங்குகிறது. மாநகராட்சி மண்டல அலுவலகங் கள், டிஆர்ஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளில் அலுவலக நாட்களில் இதற்கு மனு அளிக்கலாம்.
www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனிலும் விண்ணப் பிக்கலாம். இதற்கான கடைசி நாள் அக்டோபர் 31-ம் தேதி.

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் 2 மாதங்கள் நடக்கின்றன. மேலும், வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7, 14 என 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாமுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திருத் தப் பணிகளின்போது அரசியல் கட்சி களின் முகவர்கள் 30 படிவங்கள் மட்டுமே கொண்டுவந்து சேர்க்க லாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.
பிறகு, விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, கள ஆய்வு மூலம் இறுதிசெய்யப்படும். 2019 ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குச்சாவடிகள் உயர்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டு 65,952 வாக்குச்சாவடிகள் இருந் தன. கிராமப்புறங்களில் 1,200, நகர்ப் புறங்களில் 1,400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் வாக்குச் சாவடிகள் கணக்கிடப்பட்டு, இந்த ஆண்டு கூடுதலாக 1,692 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் வாக்குச்சாவடிகள் எண் ணிக்கை 67,644 ஆக அதிகரித் துள்ளது. தற்போது திருத்தப் பணி களின்போது புதிய வாக்காளர்கள் சேர்ந்தால், அதற்கேற்ப வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தேர்தல் எப்போது?

அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியாக உள்ளன.
அந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, ‘‘தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும். டிசம்பரில் 4 மாநில பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளது. அப்போது அறிவிக்கப்படலாம் என கருதப்படுகிறது’’ என்றார்.