தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூ கட்சி முற்றுகை போராட்டம்..

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தமிழக ஆளுநர் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டுவருகிறார். தகுதியற்ற ஆளுநர் ஆர.என். ரவியை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் கம்யூ மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, டி.ராஜா, மாநிலத் தலைவர் முத்தரசன் உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.