கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?: அறுதியிட்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வரையறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகள்

அதன் படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிக அளவு பாதித்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாலுகாக்கள்

கரூர் மாவட்டத்தின் கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம் தாலுகாக்கள்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், விருத்தாச்சலம் தாலுகாக்கள்

மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் ஆகிய தாலுகாக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம், இளையாங்குடி தாலுகாக்கள்

தேனிமாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடானை தாலுகாக்கள்

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் தாலுகாக்கள்