தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,24,522-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் பலியான நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,122-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,91,236- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 22,164- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.