தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3,53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,691-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,42,152- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 38,093- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.9 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 885 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,949-ஆக அதிகரித்துள்ளது.