தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் இதுவரை 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 4,894 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1,241 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88,476-ஆக உயர்ந்துள்ளது.