பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் உயிரிழந்தது வந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய அரசின் சீரிய திட்டத்தின் மூலம் மகப்பேறு மரணம் வெகுவாக குறைந்துள்ளதாகவும்,

ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் குழந்தைகள் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.