10 மணி நேரம் வரை நின்று கொண்டே பணியாற்றும் பெண்கள் : முற்றுப்புள்ளி வைக்கிறது கேரள அரசு..

ஜவுளிக்கடை போன்ற பெரிய கடைகளில் பெண்கள் தினமும் 10 மணி நேரம் வரை நின்று கொண்டே பணியாற்ற வேண்டுமென்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கேரள அரசு.

முன்னோடி மாநிலத்தின் முற்போக்கான சட்டம், பெண்களுக்கு இருக்கை வசதி செய்துதராவிட்டால் ₹2 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வகைசெய்கிறது.