தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை? : உச்சநீதிமன்றம் கேள்வி..

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி மாதமே தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய நிலையில் ஏன் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் ஜெயசுகின் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது குறித்து 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.