10-ஆம் முடித்தவர்களுக்கு காவலர்,சிறைக்காவலர்,தீயணைப்புகாவலர் பணி வாய்ப்பு..

தமிழக அரசின் சீருடை பணியாளர்தேர்வு முகமம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழகத்தில் கலியாகவுள்ள இரண்டாம் நிலைக்காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர்,தீயணைப்பாளர் பதவிகளுக்கு 906 பேரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 3,099 பெண்கள் உள்பட 10,329 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதே போல் சிறைத்துறையில் இரண்டாம் நிலைச் சிறைச்சாலை காவலர் பதவிக்கு 119 பேரும்,தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் பதவிக்கு 458 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 2020 ஜூலை முதல் நாளில் 18 வயது நிறைந்தவர்களாகவும், 24 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய www.tnusrbonline.org என்கிற இணையதளம் வழியாக செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தெர்வு டிசம்பர் 13-ஆம் நாள் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.