2021-2022 ஆம் ஆண்டுக்கான பி.இ,பி.டெக்., 2ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு..

காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரியில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுரிகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டு்கான பி.இ,பி.டெக்., இரண்டாம் ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

டிப்ளமோ மற்றும் இளங்கலை கணித பாடம் உள்ளடக்கிய(பி.எஸ்.இ) முடித்தவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லுாரிகளில் பி.இ,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி மாநில கலந்தாய்வு மையத்தில் புதன்கிழமை மாலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வரும்,கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளருமான கே. மனோன்மணி,இணை ஒருங்கிணைப்பாளர் கே.பாஸ்கரன், சி.உமாராணி,


அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வரும்,கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளருமான கே. மனோன்மணி செய்தியாளர்களிடம் பேசும் போது..
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகள் 471-உள்ளன. இதில் பி.இ,பி.டெக்., படிப்புகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 86,703 இடங்கள் மொத்தம் உள்ளன.
இதற்கு 29,894 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் தகுதியுள்ள 25,783 மாணவர்கள் தரவரிசையும், அவர்களுக்கான இணையதள கலந்தாய்வு விபரங்களும் www.tnela.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இணையதளம் வழியாக விண்ணப்பித்தல் கடந்த ஆக.10-ல் தொடங்கி ஆக.30-ல் நிறைவடைந்துள்ளது. கலந்தாய்வு வரும் செப்டம்பர் 23- மற்றும் 24ம் தேதி வியாழன்,வெள்ளி கிழமைகளில் ஆன்லைன் மூலம் சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும். செப்.25-ந்தேதி முதல் அக்.10-ந்தேதி வரை பொதுக் கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடைபெறும். செப். 10ந்தேதி பி.எஸ.இ., மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று நிறைவு பெறுகிறது.

மாணவர்கள் தங்களது தரவரிசை நிலையையும் அவர்களுக்கான கலந்தாய்வு தேதியினையும் இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம். தகுதிப்பட்டியிலில் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தங்களின் அமலைபேசி மற்றும் கணினி உதவியுடன் கல்லுாரி விருப்பப்பதிவை சமர்பிக்கலாம்.
தற்போது கரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக கலந்தாய்வு வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவருடன் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பாஸ்கரன், சி.உமாராணி, பி.பெருமாள், எஸ்.பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்