2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..

மாகாராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற தலமான ஷீரடிக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார்.

ஷீரடியில் பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கிய பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

நிரந்தர வீடு வறுமைக்கு எதிரான போராட்டத்தின் முதல்படியாகும். 2022 ம் ஆண்டிற்கு அனைத்து குடும்பத்திற்கும் நிரந்த வீடு வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாங்கள் எங்க பயணத்தின் பாதியை நிறைவு செய்து விட்டோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

காங்., 4 ஆண்டு கால ஆட்சியில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டிக் கொடுத்தது.

ஆனால் பாஜக,வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 1.25 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என்றார்.