5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவு:
“1. ஆயுதப்படை போலீஸ் (சென்னை) ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக நியமனம்

  1. சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ்மூர்த்தி, காலியாக உள்ள ஹெட்குவார்ட்டர்ஸ் ஐஜிபியாக நியமனம்
  2. சட்டம் – ஒழுங்கு (திருநெல்வேலி) துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், காவலர் தேர்வு பள்ளியின் (பேரூரணி, தூத்துக்குடி) எஸ்.பி-யாக நியமனம்
  3. தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ் குமார், சட்டம் – ஒழுங்கு (திருநெல்வேலி) துணை ஆணையராக நியமனம்
  4. காவலர் தேர்வு பள்ளியின் (பேரூரணி, தூத்துக்குடி) எஸ்.பி-யாக இருந்த எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக நியமனம்”.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.