கரையும் அமமுக? : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்

அமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அமமுகவில் இருந்து விலகி செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து, பல்வேறு நிர்வாகிகளும் அவரது வழியை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். சிலர் அதிமுகவிலும் கூட சென்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரனும், மாநில மாணவர் அணிச் செயலாளர் ஈரோடு எம்.பிரபுவும், மதுரை சென்ற தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அப்போது, திமுக துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்தல்களை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து டிடிவி தினகரன் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அமமுகவில் இருந்து பலரும் அடிக்கடி வெளியேறுவது, அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.