ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா விமர்சையாகக் கொண்டாட்டம்..

தென்னிந்திய கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று, திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்.

இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த வருடத்திற்கான விழாவை நடிகர் மம்மூட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் இந்தத் திருவிழாவில் கேரளா மட்டுமின்றி, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தமிழக பகுதிகளில் இருந்தும் கூட்டம் அலைமோதும்.

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், இந்தக் கோயிலில் இன்று பொங்கல் வைக்கும் விழா நடைப்பெறுகிறது. பல லட்சம் பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ள இவ்விழாவுக்கு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.