தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு: மாநில தலைமை தேர்தல் ஆணையர்..

கரோனா காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. 67 ஆயிரமாக இருந்த வாக்குசாவடி மையங்களை, 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று கூறியிருந்த நிலையில் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார்.