பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து ..

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விமான நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 150-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.