போலீசாரின் செல்போனையே “லபக்”கிய பலே திருடர்கள்…: சென்னை லகலக…!

சென்னையில் போலீசாரிடமே வழிப்பறி செய்து திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

சென்னை மாநகர காவல் துறையின் ஆயுதப் படை பிரிவில் காவலராக உள்ளார் மணிமாறன். இவர், இன்று காலை சீருடையுடன் மந்தைவெளி வி.கே.ஐயர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு மாயமாயினர். காவலர் மணிமாறன் சுதாரித்து அவர்களை பிடிக்க முயல்வதற்குள் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பினர். இதையடுத்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் காவலர் மணிமாறன் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி நடந்த சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தன்னந்தனியாக நடந்து செல்வோரிடம் செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், போலீசாருக்கு சவால் விடுவதைப் போல, காவலர் ஒருவருடையை செல்போனையே பறித்து, தங்களது, வழிப்பறிக் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

Bike thieves Snatched the Police ‘s Cell Phone