பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் கோவை பாராளுமன்ற உறுப்பினராக இருமுறை இருந்தவர். தமிழ்நாடு பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநனர்களை நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் முர்மு.

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த எல்.கணேசன்தற்போது நாகலாந்து மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதுபோல் அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கி, கடந்த மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.