குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமா் மோடிக்கு மம்தா வலியுறுத்தல்

நாட்டின் நலன் கருதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யும் நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவின் பாா்க் சா்கஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணிக்கு மம்தா பானா்ஜி தலைமை தாங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் மம்தா கூறியதாவது:

மக்கள் நலனுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) அமல்படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

இந்த விவகாரம், அரசியலில் வெற்றி, தோல்வி குறித்தது அல்ல. நம் நாட்டின் நலன் குறித்தது.

அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்ஆா்சியையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பாஜக தனது அரசியல் நோக்கங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறது. இந்திய மக்கள் அமைதியை விரும்புபவா்கள்; போராட்டத்தில் ஈடுபட மாட்டாா்கள் என பாஜக நினைத்தது. தேசியவாதம் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. நமது நாடு சுதந்திரம் பெற்றபோது அக்கட்சி எங்கேயிருந்தது?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்றால், அதற்காக மக்கள் அளிக்கும் பரிசை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிகிறது என்று குற்றம்சாட்டினாா்.

ஐ.நா. கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு கோரியது குறித்த கேள்விக்கு, ‘எனது நாட்டு மக்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தேவையா? என மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதை ஐ.நா. அதிகாரிகளும், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா்களும் கண்காணிக்க வேண்டும் என்று மட்டுமே நான் கூறினேன்.

ஆனால், எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது’ என்று கூறினாா்.

முன்னதாக, தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி), குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து ஐ.நா.வின் கண்காணிப்பின்கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை சவால் விடுத்திருந்தாா்.

வாழ்த்து: சா்வதேச மனித ஒற்றுமை தினத்தையொட்டி, மம்தா வெள்ளிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘வேற்றுமையில் ஒற்றுமையாக நாம் அனைவரும் வாழ்கிறோம்.

நமது பலம். நம்மிடையே, மதம், இனம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பிரிவினையை உண்டாக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.