தமிழக கல்லுாரிகளுக்கு நாளை முதல் ஜன.,1-ந்தேதி வரை விடுமுறை : உயர் கல்வித்துறை அறிவிப்பு

தமிழக அரசின் உயர்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில் நாளை முதல் ஜனவரி மாதம்-1-ந்தேதி வரை கல்லுாரி,பல்கழைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்துமஸ்,புத்தாண்டு,ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.