சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து :12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..

மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி சூன்-14-ஆம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மத்திய கல்வியமைச்சகம் சார்பில் நடைபெறும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோல் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று மத்திய கல்வியமைச்சகம் பிரதமர் மோடியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு தேர்வுகள் ரத்து மற்றும் ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்., தலைவர் ராகுல்,பஞ்சாப்,மகாராஷ்டிரா,மத்திய பிரதேச மாநிலங்கள் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வந்தன.