சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் : 2 நாள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..

சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததால் வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது குறித்த கவனயீர்ப்பு தீர்மானத்தில் “கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்