சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம் புதுச்சேரியில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று சென்னை உள்பட 8 மாவட்டங்களு்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளுர், கடலுார் விழுப்புரம்,இராமநாதபுரம்,துாத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அது போல் டெல்டா மாவட்டங்கள், வட மற்றும் தென் உள் மாவட்டங்களில் உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை

சென்னை,திருவள்ளுர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 21-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.