சென்னை புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : ஒருவர் கொலை..


சென்னை புழல் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் சக கைதிகள் தாக்கியதில் பாக்சர் முரளி என்ற ரவுடி உயிரிழந்துள்ளான். முன்விரோதத்தால் ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.