சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பஞ்ச பூதங்களின் ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத் திருவிழா கடந்த சூன்-25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று 9-ஆம் திருவிழாவாக தேரோட்ட நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. கீழ ரத வீதியில் பக்தர்களின் கோசத்தோடு நடராஜர்,சிவகாம சுந்தரி மற்றும் விநாயகர், சுப்பிரமணியர் தனித்தனித் தேர்களில் மாடவீதிகளில் வலம் வருகின்றனர்.இன்று மாலை தேர்கள் நிலைக்கு வரவுள்ளன.
நாளை திருமஞ்சன உற்சவ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தேர்திருவிழாவை டிமுன்னிட்டு சிதம்பரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலுார் மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்திருந்தது.