” வரும் உள்ளாட்சித் தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திப்போம்” : மா.கம்யூ மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், மத்திய அரசு கொண்டுவரும் மக்களுக்கு எதிரான சட்டங்களால் தமிழக மக்கள் பெருமளவில் பாதித்து வருவதாக குற்றம்சாட்டினார். செங்கல்பட்டு மையத்தில், தடுப்பூசி உற்பத்தி செய்ய உடனடியாக மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக்கூறினார்.