பீர் குடிக்கா விட்டால் இன்னும் நிறைய அழுதிருப்பேன்..!: அலஸ்டைர் குக்

நிறைய பீர் குடித்த பின்னரே ஓய்வை அறிவித்ததாக  இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆக திகழ்பவர் அலஸ்டைர் குக். இவர் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெருகிறார்.

ஓய்வு குறித்து சக வீரர்களிடம் அறிவிக்கும்போது ஆழுகையை அடக்குவதற்கு சில பீர்கள் தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘எனக்கு அங்கு சில பீர்கள் தேவைப்பட்டது. இல்லாவிடில், நான் ஏற்கனவே அழுததைவிட கூடுதலாக அழுதிருப்பேன். கடந்த 6 மாதங்களாக எனது மனத்திற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவு ஓடிக்கொண்டே இருந்தது. மனதளவில் எனக்கு கடினமாக இருந்தது’’ என்றார்.

Cook About Beer