கரோனா பாதிப்பு : பஞ்சாபில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்..

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை முன்னிட்டு பஞ்சாப் அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மே-3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பஞ்சாப் அரசு மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.