கரோனா தொற்று எதிரொலி: டெல்லியில் ஏப்.26 வரை முழு ஊரடங்கு..

கரோனா 2-ஆம் அலைத் தொற்றால் டெல்லியில் தினமும் 25000 பேரு்கு மேல் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இன்று இரவு 10 மணி முதல் முதல் ஏப்ரல். 26-ஆம் தேதி வரை அதாவது ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியட்டுள்ள அறிக்கையில் தலைநகர் டெல்லியில் தினமும் 25000-க்ம் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால் சுாதார ட்டமைப்பே சீர் குலைந்துவிடும் என்றார். கரோனா நோயாளிகளுக்கு போதுமான இடங்கள் மருமத்தவமனைகளில் இல்லை என்பதால் இன்று 10 மணி இரவு முதல் ஏப்ரல். 26-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும், உணவுப்பொருட்கள் மருத்துவப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கு தடையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
திருமண நிழ்ச்சியில் பாஸ் பெங்று 50 பேர் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.