மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..

சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணுாரில் நடைபெற்ற அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2015-ல் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் சீதாராம் யெச்சூரி முதன்முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.