ஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதாக நடித்த போலி அதிகாரி பிரபு சரண்..


Police arrest the fake Income Tax officer who tried to conduct a raid in Jayallitha’s niece J.Dheepa’s house.


ஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதாக நடித்த போலி அதிகாரி பிரபு என்ற பிரபாகரன் ,காவல் நிலையத்தில் சரண் தீபாவின் கணவர் மாதவன் அறிவுரையின் பேரில் தான், தான் அதிகாரி போல நடித்ததாகவும் பிரபு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாக பிரபாகரன் கூறியுள்ளார்.போலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாக என்றும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10ம் தேதி திநகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பியோடினார்.