டெல்லியில் கரோனா செய்தி சேகரிக்கச் சென்ற 55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்…

புதுடெல்லியில் நேற்று கரோனா வைரஸ் தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து,செய்தியாளர்கள் துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள் பணியாற்றுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இரு அனைத்துலகப் பத்திரிகைச் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.

செய்தியாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து தேச துரோக வழக்குகளையும் உடனே கைவிடும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறும் ஆஸ்திரியா, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த அச்சங்கங்கள் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளன.