திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பேரணிக்கு தடை கேட்டு வழக்கு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா சிறப்பு அமர்வு முன் இரவு 8 மணியளவில் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறவுள்ளது