திமுக பிரமுகர் வீட்டில் சோதனை : வெறுங்கையுடன் திரும்பிய வருமான வரித்துறை அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் வேலுச்சாமி என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வேலுச்சாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 3 லட்சத்து 48 ஆயிரம் பணம் மட்டும் அவரிடம் இருந்தது. ஆனால் அதற்கு அவற்றிற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் பணத்தை வேலுச்சாமி இடம் ஒப்படைத்துவிட்டு வருமானவரித்துறையினர் வெறுங்கையுடன் திரும்பி சென்றனர்.